அல்லாஹ் யாவற்றையும் படைத்தவன்

70

அல்லாஹ் யாவற்றையும் படைத்தவன்

 

بَدِيْعُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَ اِذَا قَضٰٓى اَمْرًا فَاِنَّمَا يَقُوْلُ لَهٗ كُنْ فَيَكُوْنُ‏

 

குர்ஆன் கூறுகிறது அவனே வானங்களையும் பூமியையும் முன்மாதிரியின்றியே படைத்தவன். அவன் எதைப் படைக்கக் கருதினாலும் அதனை “ஆகுக!” எனக் கூறிய மாத்திரத்தில் உடனே அது ஆகிவிடுகிறது.

சூரா பகரா ஆயத் 117

 

اِنَّمَاۤ اَمْرُهٗۤ اِذَاۤ اَرَادَ شَیْـٴًـــا اَنْ يَّقُوْلَ لَهٗ كُنْ فَيَكُوْنُ‏

 

குர்ஆன் கூறுகிறது அவன் யாதொரு பொருளை(ப் படைக்க)க் கருதினால் அதனை “ஆகுக!” எனக் கூறுவதுதான் (தாமதம்). உடன் அது ஆகிவிடுகின்றது.

சூரா யாஸீன் ஆயத் 82

 

قَالَ بَلْ رَّبُّكُمْ رَبُّ السَّمٰوٰتِ وَالْاَرْضِ الَّذِىْ فَطَرَهُنَّ وَاَنَا عَلٰى ذٰلِكُمْ مِّنَ الشّٰهِدِيْنَ‏

 

குர்ஆன் கூறுகிறது “அப்படியல்ல. உங்களுடைய இறைவன் வானங்களுக்கும் பூமிக்கும் இறைவனாவான். அவனே அவற்றைப் படைத்தவன்; இதற்குச் சாட்சியம் கூறுபவர்களில் நானும் ஒருவனாக இருக்கின்றேன்” என்று (இப்ராஹீம்) கூறினார்.

சூரா அன்பியா ஆயத் 56

 

♦️சகல படைப்புக்களும் நம்முடைய கண்களுக்கு தென்படுவது கிடையாது. நம்முடைய கண்களுக்கு தென்படாத எத்தனையோ விதமான படைப்புகளை அல்லாஹ் படைத்து பரிபாலித்துக் கொண்டு இருக்கிறான் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

 

الَّذِىْۤ اَحْسَنَ كُلَّ شَىْءٍ خَلَقَهٗ وَبَدَاَ خَلْقَ الْاِنْسَانِ مِنْ طِيْنٍ‏

 

குர்ஆன் கூறுகிறது அவனே ஒவ்வொரு பொருளையும் (படைத்து) அவற்றின் கோலத்தையும் மிக்க அழகாக அமைத்தான். ஆரம்பத்தில் மனிதனை களிமண்ணைக் கொண்டே படைத்தான்.

சூரா ஸஜ்தா ஆயத் 7

 

لَقَدْ خَلَقْنَا الْاِنْسَانَ فِىْۤ اَحْسَنِ تَقْوِيْمٍ‏

 

குர்ஆன் கூறுகிறது நிச்சயமாக நாம் மனிதனை மிக்க அழகான அமைப்பில் படைத்திருக்கின்றோம்.

சூரா தீன் ஆயத் 4

 

♦️மனித வர்க்கத்தை அல்லாஹ் களிமண்ணைக் கொண்டு அழகிய ஓர் அமைப்பாக படைத்திருக்கிறான். அவர்களுக்கு ஏறாளமான அருட்கொடைகளையும் பகுத்தறிவையும் கொடுத்திருக்கிறான். எனவே அவர்களை ஏன் படைத்தான் அவர்களிடம் அல்லாஹ் எதிர்பார்ப்பது என்ன என்பதை திருக்குர்ஆன் தெளிவு படுத்துகிறது.

 

وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْاِنْسَ اِلَّا لِيَعْبُدُوْنِ‏

 

குர்ஆன் கூறுகிறது ஜின்களையும், மனிதர்களையும் (எனக்கு வழிப்பட்டு) என்னை வணங்குவதற்கன்றி (வேறெதற்காகவும்) நான் படைக்க வில்லை.

சூரா தாரியாத் ஆயத்

 

ذٰ لِكُمُ اللّٰهُ رَبُّكُمْ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ خَالِقُ كُلِّ شَىْءٍ فَاعْبُدُوْهُ وَهُوَ عَلٰى كُلِّ شَىْءٍ وَّكِيْلٌ‏

 

குர்ஆன் கூறுகிறது இத்தகைய அல்லாஹ்தான் உங்களைப் படைத்து வளர்த்து பரிபக்குவப்படுத்தும் இறைவன். வணக்கத்திற்குரியவன் அவனைத் தவிர வேறு ஒருவருமில்லை. அவனே அனைத்தின் படைப்பாளன். ஆகவே, அ(வன் ஒருவ)னையே நீங்கள் (அனைவரும்) வணங்குங்கள். எல்லா காரியங்களையும் கண்காணிப்பவன் அவனே.

சூரா அன்ஆம் ஆயத் 2

 

♦️அல்லாஹ் மனித வர்க்கத்தை அழிகிய அமைப்பில் படைத்தது மட்டுமின்றி பல அருட்கொடைகளையும் பகுத்தறிவையும் கொடுத்ததன். இதன் நோக்கம் அவனை வணங்க வேண்டும். அவனுக்கு அடிபணிய வேண்டும். அல்லாஹ் அல்லாத எந்த படைப்புக்களையும் வணங்கி வழிபட்டக்கூடாது. வணங்கத் தகுதியுள்ளவன் அவனை தவிர வேறு யாரும் இல்லை என்பதை மனிதர்கள் உணரவேண்டும். மேலும் ஏனைய படைப்புக்களும் அவனையே வணங்கி வழிபட்டு வருகின்றன.

 

وَلِلّٰهِ يَسْجُدُ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِ مِنْ دَآبَّةٍ وَّالْمَلٰۤٮِٕكَةُ وَهُمْ لَا يَسْتَكْبِرُوْنَ‏

 

குர்ஆன் கூறுகிறது வானங்களிலும் பூமியிலும் உள்ள மற்ற உயிரினங்களும் அல்லாஹ்வையே சிரம் பணிந்து வணங்குகின்றன. மலக்குகளும் அவ்வாறே. அவர்கள் (இப்லீஸைப்போல் அவனுக்கு சிரம் பணியாது) பெருமையடிப்பதில்லை.

சூரா நஹ்ல் ஆயத் 49

 

تُسَبِّحُ لَهُ السَّمٰوٰتُ السَّبْعُ وَالْاَرْضُ وَمَنْ فِيْهِنَّ وَاِنْ مِّنْ شَىْءٍ اِلَّا يُسَبِّحُ بِحَمْدِهٖ وَلٰـكِنْ لَّا تَفْقَهُوْنَ تَسْبِيْحَهُمْ اِنَّهٗ كَانَ حَلِيْمًا غَفُوْرًا‏

 

குர்ஆன் கூறுகிறது ஏழு வானங்களும் பூமியும் இவற்றிலுள்ள அனைத்தும் அவனைப் புகழ்ந்து கொண்டே இருக்கின்றன. (இவற்றில்) ஒன்றுமே அவனைத் துதி செய்து புகழாதிருக்கவில்லை. எனினும், அவை துதி செய்து புகழ்வதை நீங்கள் அறிந்து கொள்வதில்லை. நிச்சயமாக அவன் பொறுமையுடையவனும், மன்னிப்புடையவனாகவும் இருக்கின்றான்.

சூரா பனீ இஸ்ராயீல் ஆயத் 44

 

♦️சகல படைப்பினங்களும் அல்லாஹ்வுக்கு சிரம் பணிந்து வணங்கி வழிபடுகின்றன. அவனை தஸ்பீஹ் துதி செய்து கொண்டே இருக்கின்றன. ஆனால் அதிகமான மனித ஜின் இனத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே மாய உலகில் அவனுக்கு மாறு செய்த வண்ணம் வாழ்ந்து வருகின்றனர். அவர்களை விட்டும் இஸ்லாமிய சமூகத்தை அல்லாஹ் பாதுகாப்பாக. ஆமீன்

 

♦️குறிப்பு :- அல்லாஹ் ஒருவன், அவன் தனித்தவன், அவனுக்கு இணையுமில்லை துணையுமில்லை, அவன் தேவையற்றவன், அவனே அனைவருக்கும் தேவை, அவன் யாரையும் பெறவில்லை யாராலும் பெறப்படவுமில்லை, அவனை போல் வேறொன்று இல்லை, அவன் எப்பொழுதும் எங்கும் இருக்கிறான், அவனுக்கு ஆரம்பமுமில்லை முடிவுமுமில்லை,
அல்லாஹ் தான் எல்லாவற்றயும் படைத்து பாதுகாக்கிறான். அவனை முழுமையாக ஏற்ற நிலையில் வணங்கி வழிபடுங்கள்.

 

WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.