தொழுகையின் ஹைஆத் அலங்கார ஸுன்னத்துக்கள்
தொழுகையின் ஹைஆத் அலங்கார ஸுன்னத்துக்கள்
♦️1) ஆரம்ப தக்பீரிலும் ருகூவில் குனியும் போதும் அதை விட்டு நிமிர்ந்து நிலைக்கு வரும்போதும் முந்திய அந்தஹிய்யாத்திலிருந்து எழுந்து நிலையில் நிற்கும் போது இரு கைகைளையும் இரு தோள்வரை உயர்த்திக் கீழே விடுதல்.
♦️2) தொப்புளுக்கும் நெஞ்சுக்கும் இடையில் இடது கை மணிக்கட்டின் மேல் வலது கையை வைத்துக் கட்டுதல்.
♦️3) மையித்துத் தொழுகையைத் தவிரவுள்ள மற்ற தொழுகைகளின் போது தொழ ஆரம்பித்து ஆரம்பத் தக்பீர் கட்டியவுடன் மெதுவாக வஜ்ஜஹ்து ஓதுதல்.
♦️4) அல்ஹம்து சூரத்தை ஓதுவதற்கு முன் எல்லா ரக்அத்துக்களிலும் அஊது பில்லாஹி மினஷ் ஷைத்தானிற் றஜீம்மையும் சேர்த்து ஓதுதல்.
♦️5) ழுஹர் அஸர் தொழுகைகளில் ஓதும் சூரத்துக்களை சப்தமின்றியும் மற்றைய மூன்று வேளைத் தொழுகைகளில் ஓதும் சூரத்துக்களையும் சப்தமிட்டும் ஓதுதல்.
♦️6) அல்ஹம்து சூரத்தை ஓதி முடிந்ததும் ஆமீன் (இந்தப் பிரார்த்தனையை ஏற்றுக் கொள்ளவாயாக) என்று கூறுதல்.
♦️7) இரண்டு ரகஅத்துகளுக்கு மேற்பட்ட தொழுகைகளில் முந்திய இரண்டு ரகஅத்துக்களிலும் அல்ஹம்து (பாத்திஹா) சூரத்துடன் வேறு ஏதாவது ஒரு சூரத்தையும் ஓதுதல்.
♦️8) ருக்ஊ ஸுஜூதுகளுக்குக் குனியும்போது ஸுஜூதை விட்டு நிமிரும் போதும் அல்லாஹு அக்பர் என்று சொல்லுதல் ருக்கூவிலிருந்து நிலைக்கு வரும்போது இருகைகளையும் உயர்த்தி
سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ
🔸ஸமி அல்லாஹு லிமன் ஹமிதஹு என்று கூறுதல்.
இதன் பொருள் :- அல்லாஹ்வைப் புகழந்தவரின் புகழை அல்லாஹ் அங்கீகரிப்பானாக! ருக்கூவில் இருக்கும் போது
سُبْحَانَ اللَّهِ الْعَظِيمِ وَبِحَمْدِهِ
🔸சுப்ஹான றப்பியல் அளீம் வபி ஹம்திஹி என்று மூன்று தடவை கூடுதல்.
இதன் பொருள் :- மகத்தான எனது இறைவனைப் புகழ்ந்து துதிக்கிறேன். ருக்கூவில் இருந்து
سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ
🔸ஸமி அல்லாஹு லிமன் ஹமிதஹு என்று கூறி நிலைக்கு வந்ததும்.
اللهُمَّ رَبَّنَا لَكَ الْحَمْدُ، مِلْءُ السَّمَاوَاتِ وَمِلْءُ الْأَرْضِ وَمِلْءُ مَا شِئْتَ مِنْ شَيْءٍ بَعْدُ
🔸றப்பனா லக்கல் ஹம்து மில் அஸ்ஸமாவாத்தி வமில்அல் அர்ழி வமில் மாஷிஃத மின்ஷையின் பஃது என்று கூறுதல்.
இதன் பொருள் :- எனது இறைவா! புகழ் யாவும் உனக்கே வான மண்டலங்கள் நிரம்பவும் பூமி நிரம்பவும் இவை தவிர நீ நாடிய இதர பொருட்கள் நிரம்பவும் உள்ள புகழ் யாவும் உனக்கே உரியவை.
🔸ஸுஜூதில் இருக்கும் போது
سُبْحَانَ رَبِّيَ الْأَعْلَى وَبِحَمْدِهِ
🔸ஸுப்றான றப்பியல் அஃலா வபிஹம்திஹி என்று மூன்று தடவையும் கூற வேண்டும்.
இதன் பொருள் :- உயர்வான எனது இறைவனைப் புகழ்ந்து துதிக்கிறேன்.
🔸ஸுஜுதிலிருந்து சிறு இருப்புக்கு வந்தவுடன்.
رَبِّ اغْفِرْ لِي وَارْحَمْنِي وَاجْبُرْنِي وَارْفَعْنِي وَارْزُقْنِي وَاهْدِنِي وَعَافِنِي وَاعْفُ عَنِّي
🔸றப்பிஃபிர்லீ வர்ஹம்னீ வஜ்புர்னீ வர்பஃனீ வர்ஜுக்னீ வஹ்தினீ வஆபினீ வஃபு அன்னீ என்று ஓத வேண்டும்.
இதன் பொருள் :- நாயனே! எனது பாவங்களை மன்னித்தருள். எனக்கு அருள்புரி. என் முறிவைப் பெருத்து, என்னை உயர்வாக்கு! எனக்கு உணவளி! எனக்கு நேர்வழி காட்டு! எனக்கு சுவாத்தியத்தைத் தந்தருள்! என்னை மன்னித்தருள்!
♦️11) நடு இருப்பிலும் அத்தஹிய்யாத்து இருப்புக்களிலிருக்கும் போதும், இரு துடைகளின் மீது இரு உள்ளங்கைகளும் பதியும் வண்ணம் விரல்களை விரித்து வைத்தல் (அதாவது விரிக்காமலும், சேர்க்காமலும் இயற்கையான முறையில் வைத்தல்)
♦️12) அத்தஹிய்யாத்தில் ஷஹாதத் கலிமாவிலுள்ள “இல்லல்லாஹு என்று கூறும்போது கலிமா விரலை உயர்த்துதல்
♦️13) அத்தஹிய்யாத்துல் முபாரகா துஸ்ஸலவாத்துத் தையிபாத்து என்று சேர்த்துத் தொடர்ச்சியாக ஓதுதல்.
♦️14) நடு அத்தஹியாத்து இருப்பிலும், இரண்டு ஸுஜுதுகளுக்கிடையில் அமரும் இருப்பிலும் வலது கால் பலத்தையூன்றி இடது காலின் மீது இருத்தல்.
♦️15) கடைசி அத்தஹிய்யாத் இருப்பிலும் இடது காலை வலது பக்கத்தில் வெளிப்டுத்தி சம்மனமாகிய பித்தட்டின் மீது அமர்தல்.
♦️16) நிரப்பமான அத்தஹிய்யாத்து. ஸலவாத்து. துஆக்கள் ஓதுதல்.
♦️17) இரண்டாம் ஸலாம் (இடது புறம் ஸலாம்) கூறுதல்.
WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்