நபி முஹம்மத் ﷺ அவர்கள் பிறந்த நாளன்று ஷைத்தான் ஒப்பாரி வைக்கிறான்

78

நபி முஹம்மத் ﷺ அவர்கள் பிறந்த நாளன்று ஷைத்தான் ஒப்பாரி வைக்கிறான்

 

عَنْ مُجَاهِدٍ رَحِمَهُ اللَّهُ قَال : رَنَّ إِبْلِيسُ أَرْبَعًا حِينَ لُعِنَ، وَحِينَ أُهْبِطَ، وَحِينَ بُعِثَ مُحَمَّدٌ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَحِينَ أُنْزِلَتِ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ

 

இப்லீஸ் (ஷைத்தான்) நான்கு சமயத்தில் ஒப்பாரி வைத்து அழுதான். அவன் சபிக்கப்பட்ட நேரத்தில், அவன் (சுவனத்தை விட்டும்) பூமிக்கு இறக்கப்பட்ட நேரத்தில், முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பூமிக்கு அனுப்பப்பட்ட நேரத்தில், அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன் என்ற அத்தியாயம் அருளப்பட்ட நேரத்தில் என முஜாஹித் (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்கள் கூறினார்கள்.

 

ஆதாரம் :- அல்அழ்மத் லி அபிஷ்ஷைகி அல் அஸ்பஹானி 5/1679

 

جاء فِي تَفْسِيرِ بَقِيّ بْنِ مَخْلَدٍ أَنّ إبْلِيسَ لَعَنَهُ اللهُ رَنّ أَرْبَعَ رَنّاتٍ : رَنّةً حِينَ لُعِنَ، وَرَنّةً حِينَ أُهْبِطَ، وَرَنّةً حِينَ وُلِدَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَرَنّةً حِينَ أُنْزِلَتْ فَاتِحَةُ

 

இப்லீஸ் (ஷைத்தான்) நான்கு சமயத்தில் ஒப்பாரி வைத்து அழுதான். அவன் சபிக்கப்பட்ட நேரத்தில் அழுதான், அவன் (சுவனத்தை விட்டும்) பூமிக்கு இறக்கப்பட்ட நேரத்தில் அழுதான், முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பூமிக்கு அனுப்பப்பட்ட நேரத்தில் அழுதான், பாத்திஹா அத்தியாயம் அருளப்பட்ட நேரத்தில் அழுதான்.

 

ஆதாரம் :- அல் ரவ்ளு அல் உனுபு 1/149 அஸ்ஸீரத்துன் நபவிய்யா 1/212

 

قال الامام الشهاب احمد القسطلاني رحمه الله” فرحم الله امرءا اتخذ ليالي شهر مولده المبارك أعياداً، ليكون أشد علة على من في قلبه مرض وإعياء داء

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்த பரகத்தான மாதத்திலுள்ள “நாட்களை” பெருநாளாக கொண்டாடும் யாவருக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக. மேலும் இவைகளை வெருக்கும் நோயாளிகளுக்கு நீங்காத (சைக்கோ மன) நோய் காணப்படும் என்ற கருத்தை புஹாரி ஷரீப் விரிவுரையாலர் இமாம் அஹ்மது கஸ்தலானி ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் கூறினார்கள்.

 

ஆதாரம் :- மவாஹிபுல்ல துன்னியா 1/148

 

குறிப்பு :- இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய பிறந்த நாளில் ஷைத்தான்கள் ஒப்பாரி வைத்து அழுகிறார்கள் அதனுடன் சேர்ந்து யூத நஸாராக்கள் மட்டுமின்றி வஹாபிஷ வாதிகளும் ஷீஆக்களும் சேர்ந்து அழுவதை நம்மால் ரபீவுல் அவ்வல் மாதம் பிறை 12 ல் காணமுடிகிறது. எனவே இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறந்த நாள் வழிகேடர்களுக்கு அதிர்ச்சி நாளாகும் ஷைத்தான்களுக்கு அழுகை நாளாகும் ஏகத்துவ முஃமின்களுக்கு பெருநாளாகும் என்ற கருத்தை திர்குர்ஆன் ஹதீஸ்களை மூலாதாரமாக வைத்து நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

 

WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.