1) நபி முஹம்மத் ﷺ அவர்களின் முன்னிலையில் வைத்து மஸ்ஜிதுகளில் மௌலிது கவி பாடல்கள்
1) நபி முஹம்மத் ﷺ அவர்களின் முன்னிலையில் வைத்து மஸ்ஜிதுகளில் மௌலிது கவி பாடல்கள்
ﻋَﻦْ ﻋَﺎﺋِﺸَﺔَ رَضِيَ الله عَنْهَا ﻗَﺎﻟَﺖْ ﻛَﺎﻥَ ﺭَﺳُﻮْﻝَ ﺍﻟﻠﻪ ﺻَﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ ﻳَﻀَﻊُ ﻟﺤَﺴَّﺎﻥَ ﻣِﻨْﺒَﺮًﺍ ﻓِﻲ ﺍﻟْﻤَﺴْﺠِﺪِ ﻳَﻘُﻮْﻡُ ﻋَﻠَﻴْﻪِ ﻓَﺎِﻧَّﻤَﺎ ﻳُﻔﺎﺧِﺮُ ﻋَﻦْ ﺭَﺳُﻮْﻝِ ﺍﻟﻠﻪ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹஸ்ஸான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு பள்ளிவாசலில் ஒரு மிம்பரை அமைத்துக் கொடுத்தார்கள். அதிலே அவர்கள் ஏறி நின்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைய் புகழ்வார்கள்.
அறிவிப்பவர் :- ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள். ஆதாரம் திர்மிதி 2773
عَنْ أَبِيْ هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُ مَرَّ بِحَسَّانَ وَهُوَ يُنْشِدُ الشِّعْرَ فِي الْمَسْجِدِ فَلَحَظَ إِلَيْهِ فَقَالَ قَدْ كُنْتُ أُنْشِدُ وَفِيْهِ مَنْ هُوَ خَيْرٌ مِنْكَ ثُمَّ الْتَفَتَ إِلَى أَبِيْ هُرَيْرَةَ فَقَالَ أَنْشُدُكَ اللهَ أَسَمِعْتَ رَسُوْلَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُوْلُ أَجِبْ عَنِّي اَللَّهُمَّ أَيِّدْهُ بِرُوْحِ الْقُدْسِ؟ قَالَ اَللَّهُمَّ نَعَمْ
ஹஸ்ஸான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பள்ளிவாசலில் வைத்து (மௌலிது) கவிபாடிக்கொண்டிருந்த பொழுது அவரை உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கடந்து சென்றார்கள். அப்பொழுது உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஹஸ்ஸான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களைக் கூர்ந்து பார்த்தார்கள். அதற்கு ஹஸ்ஸான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், “(உமர் அவர்களே!) உம்மை விட மிகச் சிறந்த(நபிய)வர்கள் இந்தப்பள்ளியில் இருக்கும் போதே நான் (மௌலிது) கவிபாடியுள்ளேன் எனக்கூறி பின்பு அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் பக்கம் திரும்பி “(அபூ ஹுரைராவே!) இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னிடம், எனக்காக பதிலளித்து (மௌலிது) கவி பாடுங்கள்! யா அல்லாஹ்! பரிசுத்த உயிர் (ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களின்) மூலம் இவரைப் பலப்படுத்துவாயாக!” என இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதை நீங்கள் கேட்டுள்ளீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், “யா அல்லாஹ்!, ஆம்!” என்றார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஆதாரம் புஹாரி 3212 முஸ்லிம் 2485
ﻋَﻦْ ﺍِﺑْﻦ ﺟَﺪْﻋَﺎﻥَ رَضِيَ اللَّهُ عَنْهُ ﻗَﺎﻝَ ﺍَﻧْﺸَﺪَ ﻛَﻌْﺐُ ﺑْﻦُ ﺯُﻫَﻴْﺮِﺑْﻦِ ﺍَﺑِﻲ ﺳﻠّﻢَ ﺭَﺳُﻮْﻝ ﺍﻟﻠﻪ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ﻓِﻲ ﺍﻟْﻤَﺴْﺠِﺪِ
கஃப் இப்னு ஜுஹைர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பள்ளிவாசலில் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் புகழ்ந்து (மௌலிது கவி) படித்தார்கள்.
அறிவிப்பவர் :- இப்னு ஜத்ஆன் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் ஹாகிம் 6555
♦️மஸ்ஜிதுகளில் மௌலிது கவி பாடல்களை பாடுவதும் இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்ட ஓர் விடயம் என்பதை மேற்கூறிய ஹதீஸ்கள் நமக்கு தெளிவு படுத்துகிறது.
குறிப்பு :- மௌலிது என்பது பிறப்பை குறிக்கும், கவி நடையில் நபிமார்கள் நல்லடியார்களை புகழ்ந்து பாடுவதற்கு அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவ முஸ்லிம்கள் மௌலிது என்ற வார்த்தையை பயன் படுத்துகின்றனர். அல்லாஹ் யாவருக்கும் அருள் புரிவானாக. ஆமீன்
WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்