10) நபி முஹம்மத் ﷺ அவர்களை குறித்து பேசிய மாற்று மத சில நவீன அறிஞர்கள்

59

10) நபி முஹம்மத் ﷺ அவர்களை குறித்து பேசிய மாற்று மத சில நவீன அறிஞர்கள்

 

பௌத்த மதகுரு தலாய்லாமா என்பவர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை குறித்து இவ்வாறு கூறுகிறார்

 

நாம் வன்முறையைக் கைவிட வேண்டும். இறைத் தூதர் நபிகள் நாயகத்தின் வழியை பின்பற்ற வேண்டும். விலை மதிக்க முடியாத பொக்கிஷமாக குர்ஆனை இறைவன் மனித குலத்துக்கு தந்திருக்கிறான். நபிகள் நாயகம் அன்பு, அமைதி, நீதியை வாழ்வில் நிலைநாட்டியவர். மனித குலம் அனைத்திற்கும் ஒரு முன் மாதிரியாக தெரிகிறார்.

 

சுவாமி விவேகானந்தர் என்பவர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை குறித்து இவ்வாறு கூறுகிறார்

 

முகம்மதிய மதம் பாமரர்களுக்கு ஒரு செய்தியாக வந்தது அதன் முதல் செய்தி சமத்துவம் முகம்மதிய மதம் உலகத்தை இறைவன் பெயரால் பிரளயத்தில் ஆழ்த்தியது. மேலும் நபிகள் நாயகம் போதித்த முதல் செய்தி சமத்துவம் எனும் ஒரே மார்க்கம் தான். அவர்களுடைய போதனைகளில் இனம் மற்றும் நிறத்தால் ஏற்றத்தாழ்வுகளை காணமுடியாது. அவர் நிச்சயமாக இறைவனின் தூதராக தான் இருக்க முடியும். இல்லையெனில் இவ்வளவு உயர்ந்த நிலையை அடைந்திருக்க முடியாது.

 

மறைந்த முன்னால் முதல்வர் ஜெயலலிதா என்பவர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை குறித்து இவ்வாறு கூறுகிறார்

 

நபிகளார் காட்டியபடி நாட்டை அமைதி இடமாது மாற்றுவேன்

 

குறிப்பு :- இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை இழிவு படுத்தியவர்கள் இவ்வுலகில் இகழப்பட்ட நிலையில் அழிந்து போனார்கள். அவர்களை புகழ்ந்து மக்கள் மத்தியில் உன்மையை வெளிப்படுத்திய யூத நஸாரா மற்றும் மாற்று மத அறிஞர்கள் அனைவரும் இவ்வுலகில் புகழப்பட்ட நிலையில் மக்களின் உள்ளங்களில் இடம் பிடித்த நிலையில் இன்று வரை அவர்கள் பேசப்பட்டு வருகிறார்கள் என்பதை நம்மால் காணமுடிகிறது.

 

WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.