12) நபி ஸுஹைப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பற்றிய முக்கிய குறிப்புகள்
12) நபி ஸுஹைப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பற்றிய முக்கிய குறிப்புகள்
♦️பெயர் :- ஸுஹைப்
♦️பிறப்பு :- கிமு. 1600
♦️தந்தை பெயர் :- மீகாயில்
♦️பிள்ளைகள் :- ஸயா, ஸபூரா
♦️சமூகம் :- மதியன் வாசிகள்
♦️தொழில் :- ஆடு மேய்த்தல்
♦️பட்டம் :- அல்லாஹ்வின் தூதர்
♦️பிரச்சாரம் :- நான் அல்லாஹ்வின் தூதர் ஆவேன். என்னை ஏற்ற நிலையில் நீங்கள் அனைவரும் அல்லாஹ்வை வணங்கி வழிபட வேண்டும் என்று பல முறை வழியுருத்திக் கூறினார்கள்.
♦️மக்களின் ஆவேசம் :- நீங்கள் ஒரு பொய்யர், உங்கள் குடும்பத்தார்கள் மட்டும் இல்லையென்றால் நிச்சயம் உம்மை நாங்கள் கல்லால் அடித்து கொன்று விடுவோம் என்று கூறினார்கள். மேலும் அவர்களையும் அவர்களை ஈமான் கொண்டமக்களையும் துன்புறுத்தவே நாடினார்கள்.
♦️இறைவனின் கட்டளை :- சுஹைப் அலைஹிஸ்ஸலாம் அவர்களையும் அவர்களைச் சார்ந்தோர்களையும் ஊரை விட்டு வெளியேறுஙாகள். அவ்வாறே அவர்கள் வெளியேறினார்கள்.
♦️தன்டனை :- பொழுது இன்னும் சரியாகப் புலரவில்லை. அந்த ஊர்வாசிகள் தத்தம் படுக்கைகளை விட்டுக்கூட எழுந்திருக்கவில்லை. சொன்ன பிரகாரம் அல்லாஹ் பூகம்பத்தை கொண்டு அவ்வூரை அளித்தான்.
♦️ஆயுட்காலம் :- நபி ஸுஹைப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சுமார் 225 வருடங்கள் வாழ்ந்துள்ளார்கள்.
♦️மரணம் :- கிமு.1490
♦️கப்ரு:- நபி ஸுஹைப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கப்ரு தர்ஹா ஷரீப் ஜோர்டான் நாட்டிலுள்ள அல் சால்ட் என்ற ஊரில் அமைந்துள்ளது.
குறிப்பு :- பிரபலமான கருத்து நபி ஸுஹைப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஷவூதி அரேபியா நாட்டிலுள்ள மக்கா நகரில் தான் நல்லடக்கம் செய்யப்பட்டார்கள் என்றும் கூறப்படுகிறது. அல்லாஹ் நன்கறிந்தவன்.
♦️குர்ஆன் :- நபி சுஹைப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பெயர் குர்ஆனில் 11 இடங்களில் இடம் பெற்றுள்ளது.
WORLD ISLAM YSYR
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்