49) தர்ஹாக்கள் பற்றிய ஒப்பீடுகளும் அதன் தெளிவுகளும்

260

49) தர்ஹாக்கள் பற்றிய ஒப்பீடுகளும் அதன் தெளிவுகளும்

 

📚 :- முஃமின்கள் கப்ரு வணங்கிகளா? குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில். தொகுப்பு :- A.M. இஹ்ஸான் (நஜாஹி, காதிரி YSYR ✍️ )

 

عَنْ أَبِي سَعِيدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَتَتَّبِعُنَّ سَنَنَ مَنْ قَبْلَكُمْ شِبْرًا بِشِبْرٍ وَذِرَاعًا بِذِرَاعٍ حَتَّى لَوْ سَلَكُوا جُحْرَ ضَبٍّ لَسَلَكْتُمُوهُ قُلْنَا يَا رَسُولَ اللَّهِ الْيَهُودَ وَالنَّصَارَى قَالَ فَمَنْ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். உங்களுக்கு முன்னிருந்த (யூதர்கள் மற்றும் கிறிஸ்த)வர்கலின் வழிமுறைகளை நீங்கள் அங்குலம் அங்குலமாக, முழம் முழமாகப் பின்பற்றுவீர்கள். எந்த அளவிற்கென்றால் அவர்கள் ஓர் உடும்பின் பொந்துக்குள் புகுந்திருந்தால் கூட நீங்கள் அதிலும் புகுவீர்கள்” என்று கூறினார்கள். நாங்களா, ”அல்லாஹ்வின் தூதரே! (நாங்கள் பின்பற்றக் கூடியவர்கள் என்று) யூதர்களையும் கிறிஸ்தவர்களையுமா நீங்கள் குறிப்பிடுகிறீர்கள்? என்று நாங்கள் கேட்டோம். அதற்கு இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி அவர்கள், வேறு யார்? என்று பதிலளித்தார்கள்.

 

அறிவிப்பவர் :- அபூ ஸயீத் அல் குத்ரி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 3456, 7320 முஸ்லிம் 2669 அஹ்மது 11800, 11843

 

عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். யார் பிற சமுதாய கலாசாரத்திற்கு ஒப்பாக நடக்கின்றாரோ அவர் அந்த சமுதாயத்தை சார்ந்தவர்.

 

அறிவிப்பவர் :- இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் அபூ தாவூத் 4033 அஹ்மது 5114, 5115, 5667

 

عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صُومُوا عَاشُورَاءَ وَخَالِفُوا فِيهِ الْيَهُودَ، صُومُوا قَبْلَهُ يَوْمًا وَبَعْدَهُ يَوْمًا

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். ஆஷுரா நாளில் நோன்பை நோருங்கள் அதற்கு முன் ஒருநாள் அல்லது அதற்கு பின் ஒரு நாள் நோன்பு நோற்று யூதர்களுக்கு மாற்றம் செய்யுங்கள்.

 

அறிவிப்பவர் :- இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் அஹமது 2154 இப்னு ஹுசைமா 2095

 

ஆரம்ப இரு ஹதீஸ்களில் யூத நஸாராக்களின் வழிமுறைகளை நீங்கள் அங்குலம் அங்குலமாக, முழம் முழமாகப் பின்பற்றுவீர்கள் என்றும் பிறமத சமுதாய கலாசாரத்திற்கு ஒப்பாக நடக்கின்றாரோ அவர் அந்த சமுதாயத்தை சார்ந்தவர் என்றும் மற்ற ஹதீஸில் யூதர்களுக்கு மாற்று மதத்தவர்களுக்கு மாற்றம் செய்யுங்கள் என்ற கருத்தை தரும் ஹதீஸ்களை முன் வைத்து வஹ்ஹாபிஷ அமைப்புக்கள் கூறும் உதாரணமும் அதற்குறிய தெளிவும்.

 

உதாரணமாக :- பிறந்த நாள் நஸாராக்கள் கொண்டாடுகிறார்கள்” முஸ்லிம்களும் கொண்டாடுகிறார்கள் என்றால்! இரண்டும் ஒன்றாகி விடுமா?

 

தெளிவு :- இந்த அளவு கோலை வைத்து பார்த்தால் யூத நஸாராக்கள் நவீன டவ்சர்” டீசட் போன்ற ஆடைகள் அவர்களின் கலாச்சாரமாக இருக்கிறது” இப்போது முஸ்லிம்கள் இவைகளை அணிந்தால் சட்டம் என்ன? இன்றைய காலகட்டத்தில் அதிகமான உடைகள், உணவு பொருட்கள், பாவனை பொருட்கள், தொழில் இயந்திர கருவிகள், மருத்துவ நவீன கருவிகள், மருந்து மாத்திரைகள், வாகனங்கள் இவையெல்லாம் மாற்றுமத யூத நஸாராக்கள் உருவாக்கியவை அவர்களின் கலாச்சாரத்தில் இவைகளும் நடைமுறையில் உள்ளது” இன்றைய நவீன முஸ்லிம்கள் மேற்கூறப்பட்ட விடயங்களை நடைமுறை படுத்திக் கொண்டு தான் இருக்கிறார்கள். இந்த அளவு கோலை வைத்து முஸ்லிம்கள் யூத நஸாராக்களின் கலாச்சாரத்திற்கு ஒப்பானவர்கள் என்று கூறலாமா? நடுநிலையாக சிந்தனை செய்து பாருங்கள்.

 

உதாரணம் :- தர்ஹாக்களுக்கு யூதர்களும் செல்கிறார்கள்” முஸ்லிம்களும் செல்கிறார்கள். அங்கு யூதர்களும் உதவி தேடுகிறார்கள்” முஸ்லிம்களும் உதவி தேடுகிறார்கள். மேலும் மாற்று மதத்தவர்கள் அவர்களின் வணக்கஸ்தங்களில் கொடி ஏற்றுகிறார்கள் விழா எடுக்கின்றனரார்கள்” அதேபோல் முஸ்லிம்களும் தர்ஹாக்களில் கொடி ஏற்றுகிறார்கள் விழா எடுக்கின்றார்கள் என்றால்! இரண்டும் ஒன்றாகி விடுமா?

 

தெளிவு :- இந்த அளவு கோலை வைத்து பார்த்தால் யூதர்கள் மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாசலுக்கு செல்கிறார்கள்” முஸ்லிம்களும் மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாசலுக்கு செல்கிறார்கள். மேலும் மாற்று மத தமிழர்கள் கங்கை நீரை பரக்கத்தாக குடிக்கிறார்கள்” முஸ்லிம்கள் ஜம்ஜம் நீரை பரக்கத்தாக குடிக்கிறார்கள். மாற்று மதத்தவர்கள் கோயிலை வலம் வருகிறார்கள்” முஸ்லிம்கள் கஃபாவை வலம் வருகிறார்கள். மாற்று மதத்தவர்கள் சாமி சிலைகளை முத்தமிடுகிறார்கள்” முஸ்லிம்கள் ஹஜருல் அஸ்வத் கல் அது அல்லாத கஃபா மற்றும் தர்ஹாக்களை முத்தமிடுகிறார்கள். மாற்று மதத்தவர்கள் பல நாடுகளில் இருந்து பலனி மலை ராமேஸ்வரத்திற்கு பிரயாணம் செல்கிறார்கள்” முஸ்லிம்கள் ஹஜ்ஜிக்கு பிரயாணம் செல்கிறார்கள். மாற்று மதத்தவர்கள் ராமேஸ்வரம் சென்று மொட்டை அடிக்கிறார்கள்” முஸ்லிம்கள் ஹஜ்ஜிக்கு சென்று மொட்டை அடிக்கிறார்கள். மாற்று மதத்தவர்களும் மிருகங்களை அறுத்து பழியிடுகிறார்கள்” முஸ்லிம்களும் மிருகங்களை அறுத்து பழியிடுகிறார்கள். மாற்று மதத்தவர்களும் நேர்ச்சை செய்கிறார்கள்” முஸ்லிம்களும் நேர்ச்சை செய்கிறார்கள். இது போன்று பல உதாரணங்களை சொல்லிக்கொண்டே போகமுடியும். அன்புக்குரிய சகோதர சகோதரிகளே! சற்று சிந்தித்துப் பாருங்கள். இவ்வாறான காரணங்களை வைத்து ஒட்டுமொத்தமாக இஸ்லாமிய வணக்க வழிபாடுகள் அனைத்தும் மாற்று மதங்களுக்கு ஒப்பானவை என்று கூறலாமா? நடுநிலையாக சிந்தனை செய்து பாருங்கள். இது போன்ற சில ஒப்பீடு உதாரணங்களை வைத்துக் கொண்டு தவ்ஹீத் என்ற பெயரில் ஊலையிட்டுக் கொண்டும் ஆலிம் என்ற போர்வையில் மக்கள் மத்தியில் வலம் வருகிறார்கள். இவர்களை விட்டும் முஸ்லிம்களை அல்லாஹ் பாதுகாப்பானாக. ஆமீன்

 

உண்மையில் மேற்கூறிய ஹதீஸில் என்ன கூறப்படுகிறது? பிறமத கலாச்சாரம் என்றால் என்ன? என்பது பற்றி சுருக்கமாக பார்க்கலாம். முஸ்லிம் மக்களிடையே ஒரு செயல் நடைபெறுகிறது அந்த செயல் யூத நஸாராக்களின் கலாச்சாரமாக இருக்கிறது. அந்த (செயல்) கலாச்சாரம் திருக்குர்ஆன் ஹதீஸிக்கு முற்றிலும் முறனாக இருக்கிறது. இவ்வாறான ஒரு செயலை முஸ்லிம்கள் கடைபித்து வந்தால் அவர்கள் பிறமத கலாச்சாரத்திற்கு ஒப்பானவர்கள் என்று பொருள் கொள்ளப்படும். அது அல்லாமல் ஒரு செயல் முஸ்லிம் மக்களிடையே நடைபெறுகிறது. மேலும் அந்த செயல் திருக்குர்ஆன் ஹதீஸிக்கு நேர்படுகிறது. இருப்பினும் இது போன்ற ஒரு செயல் மாற்று மத கலாச்சாரத்தில் இருந்தாலும் சரி அவர்கள் செய்வது போன்று நாம் செய்யாமல் அதற்கு மாற்றாக திருக்குர்ஆன் ஹதீஸ் அடிப்படையாக வைத்து அதன செய்து வருவதில் எவ்விதகுற்றமும் இல்லை என்பதே! மேற்கூறிய ஹதீஸின் உண்மையான விளக்கமாகும்.

 

WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.