God கடவுள் யார்?

422

கடவுள் உன்னை உருவாக்கியவனே தவிர நீ உருவாக்கிய ஒன்று எக்காலமும் கடவுளாக இருக்க முடியாது.

 

படைப்பாளி படைப்புக்களை படைத்து அவனே அதனைப் பாதுகாக்கிறான், மேலும் படைப்புக்கள் படைப்பாளியின் நாட்டத்தை கொண்டு ஏனைய படைப்புக்களை பாதுகாக்கிறது, இதில் எந்த ஒரு ஆச்சரியக்குறியும் இல்லை. ஆனால் படைப்பாளியை மனித படைப்புக்கள் பாதுகாக்கிறது, மேலும் படைப்பாளியை மனித படைப்புக்கள் கற்சிலைகளாக செய்து வேரு சில உருவங்களாக செய்து ஓர் இடத்தில் அவைகளை முடக்கி வைக்கிறது என்பது ஆச்சரியக்குறியே அன்றி வேறில்லை. 

💥 கேள்வி :- கடவுள் சர்வலோகம் பிரபஞ்சத்திலுள்ள எல்லா வஸ்துக்களையும் படைத்தவன், அவன் பரிபாலிப்பவன். படைப்பாளி படைப்புகளை உருவாக்க முடியும் அதாவது படைக்க முடியும், படைக்கப்பட்ட படைப்புக்கள் படைப்பாளியை உருவாக்க முடியுமா? 

💥 கேள்வி :- கடவுள் நம்மை உருவாக்கியவன் அப்படியிருக்கையில் நாம் உருவாக்கும் கற்சிலைகள் அது அல்லாதவைகள் எப்படி கடவுள்களாக இருக்க முடியும்?   

💥 கேள்வி :- கடவுள் என்று வர்ணிக்கப்படக்கூடிய ஒருவரின் மனைவி பத்தினி தன்மையில் இருக்கிறாளா? இல்லையா? என்றுகூட அவரால் அறிய முடியவில்லை என்றால்! அப்படியாப்பட்ட ஒருவர் எப்படி கடவுளாக இருக்க முடியும்?  

💥 கேள்வி :- நம்மை போன்ற வாழ்க்கையை வாழும் பலர்கள். நாம் பிற்காலத்தில் துறவியாக மாறுவோம், பிர மனிதர்கள் நம்மை கடவுளாக பார்ப்பார்கள் என்றுகூட அவருக்கே தெரியாது. இவ்வாறு இருக்கும் மனிதர்கள் பிற்காலத்தில் துறவிகளாக மாறுகிறார்கள், நல்லதை கூறுகிறார்கள் என்ற காரணத்தால்! அவர்கள் எப்படி கடவுளாக முடியும்? 

💥 கேள்வி :- கடவுள் படைப்புகளை படைத்து பரிபாலனம் செய்து வருகிறான். அடக்கி ஆளுகிறான். ஆனால் படைப்புகள் படைத்த கடவுளை துன்புறுத்தியது மட்டுமின்றி பல வேதனைகள் செய்து சிலுவையில் தொங்கவிடுகிறார்கள் என்றால்! இது எப்படி சாத்தியமாகும். ஆபத்துக்கள் வரும் போது தன்னை தானே காத்துக் கொள்ள முடியாதவர் எப்படி கடவுளாக இருக்க முடியும்? 

💥 கேள்வி :- கடவுளின் தீர்க்கதரிகள் நபிமார்கள். மேலும் கடவுளின் நெருக்கத்தை பெற்ற நல்லடியார்களின் தர்ஹா கல்லறைகளை (மஸ்ஜித்) வணக்கஸ்தலமாக சிலர்கள் எடுத்துக் கொண்ட காரணத்தால்! நபிமார்கள் நல்லடியார்கள் கடவுளாக முடியுமா? 

💥 கேள்வி :- கடவுள் ஒருவன் என்று ஏற்றுக் கொள்ளும் சிலர்கள் அத்தகைய கடவுளுக்கு கற்பனையில் கை, கால், முகம் போன்ற மனித உருவம் கற்பித்து. அத்தகைய கடவுளை உயரமான ஓர் அர்ஷ் எனும் சிம்மாசனத்தில் அமர வைத்து விட்டால்! அவன் உன்மையான கடவுளாக முடியுமா?  

♦️அன்புக்குரிய சகோதர சகோதரிகளே! மேற்கூறிய கேள்விகள் எங்கள் மனதில் எழும் சந்தேகங்களே அன்றி வேறில்லை. பிரமதக் கடவுள்களை மதிக்க வேண்டும், அவைகளுக்கு ஏசக்கூடாது என்று இஸ்லாம் பறைசாற்றுகிறது. சகல மதங்களும் பல கோணங்களில் இருந்தாலும் அடிப்படையில் கடவுள் ஒருவன் இருக்கிறான் என்றே ஏற்றுக் கொள்கிறது. அத்தகைய ஓர் கடவுளை பல கடவுள்களாக மாற்றியது மனிதர்களே அன்றி வேறில்லை.

♦️அறிந்து கொள்ளுங்கள்! கடவுள் என்பவன் படைத்தவன் படைப்பாளி அவன் சக்தி மிக்கவன் அவன் தான் படைப்பினங்களை படைத்தான். அவன் படைத்த படைப்பினங்கள் எக்காலமும் படைப்பாளியை படைக்க முடியாது அதாவது கற்சிலைகளாக அது அல்லாத உருவங்களாக கடவுளை உருவாக்க முடியாது. கற்சிலைகள் அது அல்லாத மனித சிந்தனைக்கு எட்டும் உருவங்கள் அனைத்தும் படைப்பினங்களை சார்ந்தது. அவைகள் முற்றாக அழிந்து போகக்கூடியது. ஆக அழிந்து போகக்கூடிய ஒன்று எப்படி கடவுளாக இருக்க முடியும்? 

اِنَّمَا تَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ اَوْثَانًا وَّتَخْلُقُوْنَ اِفْكًا

குர்ஆன் கூறுகிறது அல்லாஹ்வை அன்றி நீங்கள் வணங்கும் சிலைகளெல்லாம் நீங்கள் பொய்யாகக் கற்பனை செய்து கொண்டவைதாம்.  

சூரா அன்கபூத் ஆயத் 17 

மனிதர்களில் சிலர் உயிர் அற்ற கற்சிலைகளாக அது அல்லாத உருவங்களாக தன் இஷ்டப்படி பொய்யான பல கடவுள்களை உருவாக்கி அவைகளை வணங்கி வழிபட்டு வருகின்றனர். அறிந்து கொள்ளுங்கள். அல்லாஹ்வை அன்றி நீங்கள் கற்பனை செய்து வணங்கும் விக்கிரகச் சிலைகள் அது அல்லாதவையெல்லாம்  நீங்கள் பொய்யாகக் கற்பனை செய்து கொண்டதே அன்றி வேறில்லை என்ற கருத்துக்களை இஸ்லாம் பறைசாற்றுகிறது. 

♦️ குறிப்பு :- அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவதிகளின் பார்வையில் கடவுள் என்பவன் ஒருவன், அவன் தனித்தவன், அவனுக்கு இணையும் இல்லை துணையும் இல்லை, அவன் தேவையற்றவன், அவனே அனைவருக்கும் தேவை, அவன் யாரையும் பெறவில்லை யாராலும் பெறப்படவுமில்லை, அவனை போல் வேறொன்று இல்லை, சுய சக்தி என்பது அவனை தவிர வேறு யாருக்கும் இல்லை, அவன் ஒவ்வொரு வஸ்துக்களிலும் சூழ்ந்தவனாக இருக்கிறான், அவனுக்கு மறைவாக எதுவும் இல்லை, அவனுக்கு ஆரம்பமும் இல்லை முடிவும் இல்லை, அவன் தான் எல்லாவற்றயும் படைத்து பாதுகாக்கிறான், அவன் உங்களை அடக்கி ஆளுகிறான், உங்களால் அவனை அடக்கி ஆள முடியாது, அவனை முழுமையாக ஏற்ற நிலையில் அவனை மட்டுமே வணங்கி வழிபடுங்கள். கடவுள் ஒருவன் என்று உறுதியாக மக்கள் மத்தியில் உறக்கச் சொன்ன தீர்க்கதரிசி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையும் அவர்களது போதனைகளையும் உறுதியாக ஏற்று அவர்களை பின்பற்றி நடந்து கொள்ளுங்கள். அல்லாஹ் யாவருக்கும் அருள் புரிவானாக. ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன் 

நூல் :- (அல்லாஹ் அஹதானவன்)

WORLD ISLAM YSYR ✍️        அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்      

Leave A Reply

Your email address will not be published.